உள்ளூர் செய்திகள் (District)

எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் பேட்டரி வெடிப்பு-கணவன், மனைவி காயம்

Published On 2023-02-12 09:54 GMT   |   Update On 2023-02-12 09:54 GMT
  • எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் பேட்டரி வெடித்ததில் கணவன், மனைவி காயம் அடைந்தனர்
  • புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி:

திருச்சி உறையூர் தெருவை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகன் பாஸ்கர் (வயது29). இவர் அண்மையில் எலக்ட்ரிக்கல் மோட்டார் சைக்கிள் வாங்கி பயன்படுத்தி வருகிறார். இந்நிலையில் பாஸ்கர் தனது வீட்டின் உள்ளே எலக்ட்ரிக்கல் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு பேட்டரிக்கு சார்ஜ் ஏற்றி உள்ளார். பிறகு சார்ஜை ஆப் செய்துவிட்டு வண்டியை நிறுத்தி வைத்திருந்தார். இந்த நிலையில் திடீரென்று எலக்ட்ரிக்கல் மோட்டார் சைக்கிளின் பேட்டரி வெடித்தது. இந்த சம்பவத்தில் வீட்டில் இருந்த பாஸ்கர் மற்றும் அவரது மனைவி நந்தினி இருவரும் காயம் அடைந்தனர். இதையடுத்து அவர்களை திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பாஸ்கர், நந்தினி இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து பாஸ்கர் உறையூர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அண்மை காலமாக எலக்ட்ரிக்கல் மோட்டார் சைக்கிள் திடீரென்று தீப்பற்றி எரிவது தொடர் கதையாகி வருகிறது.

Tags:    

Similar News