காட்டுப்புத்தூர் அருகே வாகனம் மோதி பெண் சத்துணவு அமைப்பாளர் படுகாயம்
- வாகனம் மோதி பெண் சத்துணவு அமைப்பாளர் படுகாயம் அடைந்தார்
- உப்பாத்துவாரி அருகே வரும் பொழுது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியது
தொட்டியம்:
திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் அருகே உள்ள மருதம்பட்டிபுத்துரை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மனைவி சுகந்தி (வயது 44)/ இவர் ஆணைக்கல்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் தொட்டியம் சென்று விட்டு மேக்க நாயக்கன்பட்டியில் இருந்து தனது இருசக்கர வாகனத்தில் எம்.களத்தூர்- மருதம்பட்டி சாலையில் வந்து கொண்டிருந்தார் அப்போது உப்பாத்துவாரி அருகே வரும் பொழுது அவர் பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி சுகந்திக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இவரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சுகந்தி சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து மருதம்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க செயலாளரும் சுகந்தியின் கணவர் ராதாகிருஷ்ணன் காட்டுப்புத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காட்டுப்புத்தூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ஆறுமுகம் விசாரணை மேற்கொண்டு வருகிறார். மேலும் அடையாளம் தெரியாத வாகனத்தை தேடி வருகின்றனர்.