உள்ளூர் செய்திகள் (District)
தங்க முத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
- திருச்சி சோமரசம்பேட்டை அருகே உள்ள கிரிக்கல் மேடு கிராமத்தில் உள்ள தங்க முத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது
- குதிரையில் இருக்கும் சங்கிலி ஆண்டவருக்கு புனித நீர் ஊற்றி அபிஷேகம்
திருச்சி சோமரசம்பேட்டை அருகே உள்ள கிரிக்கல் மேடு கிராமத்தில் இருக்கும் சித்தி விநாயகர், தங்க முத்து மாரியம்மன், சங்கிலி ஆண்டவர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. குதிரையில் இருக்கும் சங்கிலி ஆண்டவருக்கு புனித நீர் ஊற்றி அபிஷேகம் நடைபெற்றது . விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் முக்கியஸ்தர்கள் தங்கராஜ், போசன், ஜெயராஜ் மற்றும் போசம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சக்திவேல் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்