உள்ளூர் செய்திகள்

சிக்கத்தம்பூரில் கொட்டி தீர்த்த கன மழை

Published On 2022-09-06 08:33 GMT   |   Update On 2022-09-06 09:24 GMT
  • சிக்கத்தம்பூரில் கனமழை கொட்டி தீர்த்தது
  • கனமழையாக இரவு வரை நீடித்தது.

திருச்சி:

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் ஒன்றியம் சிக்கத்தம்பூர் ஊராட்சியில் நேற்றிரவு கன மழை பொழிந்தது. நேற்று காலையில் சுட்டெரித்த வெயில் மாலை வேளையில் குளிர்காற்றுடன், இடி மின்னலுடன் மழை பொழிய ஆரம்பித்தது. லேசான தூறலுடன் ஆரம்பித்து கனமழையாக இரவு வரை நீடித்தது.

சிக்கத்தம்பூரை அடுத்துள்ள சேர்வைராயன்குட்டை பகுதியில் பெய்த கன மழையால், குட்டை நிரம்பி வழிந்து, தண்ணீர் சிக்கத்தம்பூர் சாலைகளில் ஆறாக ஓடியது. இரு சக்கர வாகனங்கள், கார்கள் தண்ணீரில் தத்தளித்த படியே சென்றன. சிக்கத்தம்பூர் ஊராட்சி தலைவர் சசிகலாகார்த்திக், முன்னெச்செரிக்கையாக சாலையோரத்தில் உள்ள வடிகால் வாய்க்கால்களை பொக்லைன் மூலம் தூர்வாரியிருந்ததால், சாலைகளில் வந்த தண்ணீரின் நீரோட்டம் குடியிருப்பு பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்யாமல் , பாதிப்பின்றி சென்றது.இருப்பினும், கனமழை, நீரோட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. உப்பிலியபுரம் சப்இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையிலான போலீசார் நள்ளிரவு வரை போக்குவரத்து, பாதுகாப்பு பணியிணில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News