உள்ளூர் செய்திகள் (District)

முறைகேடுகளில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை

Published On 2023-03-01 10:35 GMT   |   Update On 2023-03-01 10:35 GMT
  • சிவில் சப்ளை சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
  • நேரடி நெல் கொள்முதல் நிலைய அலுவலர்களுடன் கலந்தாய்வு

திருச்சி, 

திருச்சி மண்டல குடி–மைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா திருச்சியில் நேரடி நெல் கொள்முதல் நிலைய அலுவலர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசுகையில், நேரடி நெல் கொள்முதல் நிலை–யங்களில் பணியாற்றும் அலுவலர்கள் விவசாயிகளி–டம் உரிய ஆவணங்களை பெற்றுக்கொண்டு நெல்லை கொள்முதல் செய்ய வேண் டும்.மேலும் கையூட்டு வாங் காமல், விவசாயிகளை காக்க வைக்காமலும் செயல்பட வேண்டும். குறிப்பாக வியா–பாரிகளிடமிருந்து நெல்லை கொள்முதல் செய்யக் கூடாது. இந்த உத்தர–வுகளை மீறி முறைகேட்டில் ஈடுபடும் அலுவலர்கள் மீது கடுமையான சட்ட நட–வடிக்கைகள் எடுக்கப்படும் என்றார். கூட்டத்தில் திருச்சி சரக துணை போலீஸ் சூப்பிரண்டு சுதர்சன், நுகர் பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் பாலமுருகன், தரகட்டுப்பாட்டு மேலா–ளர் வனிதாமணி, இன்ஸ்பெக் டர் கோபிநாத் மற்றும் சப்-–இன்ஸ்பெக்டர் கண்ண–தாசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News