உள்ளூர் செய்திகள் (District)

கவிஞர் தாமரைக்கு ஜல்லிக்கட்டு பாதுகாப்பு சங்கம் எச்சரிக்கை

Published On 2023-01-25 08:17 GMT   |   Update On 2023-01-25 08:17 GMT
  • வேறு கூட்டத்துடன் சேர்ந்து சதி செய்கிறார் என்றே தோன்றுகிறது
  • கொடும்பாவி எரித்து எதிர்ப்பு காட்ட முடிவு

திருச்சி,

ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச்சங்க மாநில இளைஞ–ரணி தலைவர் டி.ராஜேஷ் வெளியிட்டுள்ள அறிக்கை–யில் கூறியிருப்பதாவது:- கவிஞர் தாமரை திரைப்பட பாடல் எழுதுவது–டன் தனது கருத்தை நிறுத்திக் கொள்ளட்டும். தமிழனின் மரபுகளை மறக்கடிக்க அவர் வேறு கூட்டத்துடன் சேர்ந்து சதி செய்கிறார் என்றே தோன்றுகிறது. எது வன்முறை என்பதற்கு அவர் தந்துள்ள விளக்கம் அவரது அறியாமையை காட்டுகிறது. மாடு வாய் திறந்து பேசுமா, தன் வலியை சொல்ல முடியுமா என்கிறார். கவிஞருக்கு மாடு பேசாது என்பது இப் போதுதான் தெரிகிறதா. ஜல்லிக்கட்டு காளையை அடக்கும் வீரர்கள் யாரும் அதிகபட்சமாக 80 கிலோவுக்கு மேல் இருக்க வாய்ப் பில்லை. அப்படியே ஒரு கட்டத்தில் 2 அல்லது 3 பேர் பிடித்தாலும் உடனடியாக அதை தடை செய்து விடுகிறார்கள். ஒருவர்தான் பிடிக்க வேண்டும் என்பது போட்டியின் விதி. டன் கணக்கில் எடையை சுமந்து செல்லும் காளையை 80 கிலோ எடை கொண்ட வீரன் அடக்குவது எந்த விதத்திலும் கொடுமையோ, வன்முறையோ ஆகாது. நீங்கள் பால், மோர், தயிர், டீ, காபி சாப்பிடும் வழக் கம் உள்ளவராகத்தான் இருப்பீர்கள். பால் கறக்கும் போது, பசு வலிக்கிறது என்று எப்போதாவது கூறியிருக்கிறதா, இல்லை அதனிடம் கேட்டுவிட்டுத்தான் பால் கறக்கிறோமா. உங்களின் கருத்து தமிழர் களின் மரபு, வீரம், பாரம்ப–ரியத்துக்கு எதிரானது மட் டுமல்ல. தமிழர்களுக்கு எதிரான கும்பலிடம் நீங்கள் சேர்ந்து சதி செய்கிறீர்களோ என்று சந்தேகம் ஏற்படுகிறது. தமிழகத்தில் இந்த ஆண்டு 150-க்கும் மேற்பட்ட இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடக்க இருக்கிறது. பல இடங்களில் சிறப்பாக முடிந்துவிட்டது. எனவே தமிழன் அமை–திப்புரட்சி, மெரினா புரட்சி நடத்தி பெற்ற உரிமையை பறிக்க நினைக்கும் உங்க–ளின் கொடும்பாவியை கொளுத்தி எங்களின் எதிர்ப்பை காட்ட முடிவு செய்துள்ளோம். இதோடு உங்கள் விஷமத்தனமாக கருத்தை மூட்டை கட்டி விடுங்கள் என்று தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச்சங்கம் சார்பில் எச்சரிக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள் ளார்.

Tags:    

Similar News