உள்ளூர் செய்திகள் (District)

திருச்சி கல்லுக்குழியில் தாய், மகள் மர்ம சாவு

Published On 2023-03-29 08:38 GMT   |   Update On 2023-03-29 08:38 GMT
  • மர்மமான முறையில் இறந்து கிடந்தனர்
  • கண்டோன்மெண்ட் போலீசார் விசாரணை

திருச்சி,

திருச்சி கல்லுகுழி பகுதியைச் சேர்ந்தவர் வீரய்யா. இவரது மனைவி சித்ரா (வயது 46). இவர்களின் மகள் அஷ்டலட்சுமி (20). இவர்கள் இருவரும் இன்று மர்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்தனர். இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் கொடுத்த புகாரின் பேரில் கண்டோன்மெண்ட் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். தாயும் மகளும் மர்மமான முறையில் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News