உள்ளூர் செய்திகள் (District)

திருச்சி அருகே ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து சிகிச்சை பெற்ற பெண் சாவு

Published On 2023-02-12 10:01 GMT   |   Update On 2023-02-12 10:01 GMT
  • திருச்சி அருகே ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து சிகிச்சை பெற்ற பெண் பலியானார்
  • இந்த சம்பவம் குறித்து நம்பர் ஒன் டோல்கேட் போலீசார் தொடர்ந்து விசா–ரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி:

திருச்சியை அடுத்த நம்பர் ஒன் டோல்கேட் பகுதியை சேர்ந்தவர் பிச்சை. ஓய்வு பெற்ற ஆசிரியரான இவரது மனைவி புஷ்பம் (வயது 64). நேற்றிரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த புஷ்பத்திற்கு இன்று அதிகாலை 1.30 மணி அளவில் திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து அவரை கணவர் பிச்சை மற்றும் மகன் அசோக் ஆகிய இரு–வரும் நம்பர் ஒன் டோல் கேட் பகுதியில் உள்ள தனி–யார் மருத்துவமனைக்கு கொண்டு போய் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் திடீரென்று மேல் சிகிச்சைக்காக செக்போஸ்ட் அருகில் உள்ள அவர்களுடைய மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் புஷ்பத்தை அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் அந்த தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட புஷ்பத் திற்கு தொடர்ந்து மூச்சு திணறல் ஏற்பட்டு கொண்டு இருந்தது. இதனைத் தொடர்ந்து அவருக்கு ஆக்சிஜன் செலுத்த அந்த மிஷினை செயல்படுத்தும் பொழுது திடீரென்று பிரசர் அதிகமாகி ஆக்சி–ஜன் வெளியேறும் சிலிண்டர் வெடித்தது. இந்த சம்ப–வத்தில் புஷ்பா பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து புஷ்பாவின் மகன் அசோக் நம்பர் ஒன் டோல்கேட் போலீசில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் தனியார் மருத்துவமனை தனது தாய்க்கு சரியான முறையில் சிகிச்சை அளிக்கவில்லை என்றும், மருத்துவமனையில் போதிய டாக்டர்கள் ஊழியர்கள் இல்லாமல் அலட்சியமாக செயல்பட்டதால் இந்த சம்பவம் நடந்தது என்று கூறியுள்ளார். இந்த சம்பவம் குறித்து நம்பர் ஒன் டோல்கேட் போலீசார் தொடர்ந்து விசா–ரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

Similar News