உள்ளூர் செய்திகள் (District)
திருச்சி விமான நிலையத்தில் ரூ.44.60 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்
- சேலத்தை சேர்ந்த பயணி உடலில் மறைத்து தங்கத்தை கடத்தி வந்தார்
- கடத்தி வந்தவரிடம் வான் நுண்ணறிவு சுங்கத்துறையினர் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்
கே.கே.நகர்,
சார்ஜாவில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி உள்ளனர் அப்போது சேலத்தைச் சேர்ந்த பிரகாஷ் (வயது 46) என்ற பயணியின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரை தனியாக அழைத்து சென்று சோதனை செய்தபோது அவர் தனது உடலில் மறைத்து எடுத்து வந்த 730 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இதன் இந்திய ரூபாயின் மதிப்பு ரூபாய் 44.60 லட்சம் என தெரிய வருகிறது