உள்ளூர் செய்திகள் (District)

அரசு பேருந்து மோதி பள்ளி சிறுவன் படுகாயம்

Published On 2023-01-13 07:23 GMT   |   Update On 2023-01-13 07:23 GMT
  • அரசு பேருந்து மோதி பள்ளி சிறுவன் காயம் அடைந்தான்
  • முசிறி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் திருச்சி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வருகிறார்
முசிறி:


முசிறி அருகே உள்ள அட்டலாப்பட்டி சேர்ந்த முத்துசாமி மகன் ரித்தீஷ் (வயது 8). இவர் தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார், தனது சகோதரி சுதர்சனா என்பவருடன் முசிறி துறையூர் சாலையில் காளியம்மன் கோவில் அருகே நடந்து வந்தபோது திருச்சியில் இருந்து சேலம் நோக்கி சென்ற அரசு பேருந்து இவர் மீது மோதியதில் சிறுவன் பலத்த காயமடைந்தார்.

காயமடைந்த சிறுவன் ரித்தீஷை அருகில் உள்ளவர்கள் மீட்டு முசிறி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் திருச்சி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் தொடர்பாக ரித்தீஷ்ன் தந்தை முத்துசாமி முசிறி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் அரசு பேருந்து ஓட்டுனர் ராஜேந்திரன் என்பவர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

Similar News