உள்ளூர் செய்திகள்

பழக்கடை பூட்டை உடைத்து திருட்டு

Published On 2023-04-20 08:08 GMT   |   Update On 2023-04-20 08:08 GMT
  • ரூ.20 ஆயிரத்தை திருடி சென்ற மர்ம நபர்கள்
  • மர்ம ஆசாமிகளுக்கு போலீசார் வலைவீச்சு

திருச்சி,

திருச்சி காஜாமலை முகமது நகரை சேர்ந்தவர் முகமது யாசர்அரபத் (வயது 40). இவர் தலைமை தபால் நிலையம் அருகில் உள்ள வணிக வளாகத்தில் பழச்சாறு கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். இந்த நிலையில் மர்ம ஆசாமிகள் கடையின் ஷட்டர் பூட்டை உடைத்து, உள்ளே நுழைந்து கல்லாப்பெட்டியில் இருந்த ரூ. 20 ஆயிரம் பணத்தை திருடிக் கொண்டு ஓடிவிட்டனர். இதுகுறித்து முகமது யாசர் அரபத் பாலக்கரை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து ரூ 20 ஆயிரம் பணத்தை திருடிய மர்ம ஆசாமியை தேடி. வருகின்றனர்.

Tags:    

Similar News