உள்ளூர் செய்திகள்

திருச்சி ஏர்போர்ட் பகுதியில் ரூ.9.64 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்

Published On 2023-05-29 07:55 GMT   |   Update On 2023-05-29 08:10 GMT
  • சிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கு கிரைண்டிங் மிஷினில் மறைத்து கடத்தி வந்த தங்கம் பறிமுதல்
  • பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தை படத்தில் காணலாம்

திருச்சி,

சிங்கப்பூரில் இருந்து இன்று அதிகாலையில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி வந்தடைந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சல்லடை போட்டு சோதனை நடத்தினர். அப்போது ஆண் பயணி ஒருவர் கொண்டு வந்த கிரைண்டர் எந்திரத்தின் மீது சந்தேகம் ஏற் பட்டது. இதனைத்தொடர்ந்து அந்த எந்திரத்தை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அதில் மறைத்து எடுத்து வந்த ரூ.9.64 லட்சம் மதிப்பிலான 159 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்து அவரிடம் தொடர்பு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News