உள்ளூர் செய்திகள் (District)

திருச்சியில் மோட்டார் சைக்கிள் மோதி மாணவி பலி

Published On 2022-08-25 09:11 GMT   |   Update On 2022-08-25 09:11 GMT
  • நிகிதா சோமரசம்பேட்டை–யில் உள்ள ஒரு நடுநிலைப் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார்.
  • சாலையைகடக்க முயன்ற போது அந்தவழியாக வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக நிகிதா மீது மோதியது

திருச்சி,

கரூர் மாவட்டம் குளித்தலை முதலைப்பட்டி காவல்நகர் பகுதியை சேர்ந்தவர் வண்ணான் (வயது45) இவரது மகள் நிகிதா(12).இவர் சோமரசம்பேட்டை–யில் உள்ள ஒரு நடுநிலைப் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்றைய தினம் பள்ளி முடிந்து வீடு திரும்புவதற்காக வியாழன் மேடு சாலையில் சோமரசம்பேட்டை பஸ் நிறுத்த பகுதிக்கு நடந்து சென்றார்.

பின்னர் சாலையைகடக்க முயன்ற போது அந்தவழியாக வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக நிகிதா மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு குழுமணி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். டாக்டர்அவரை பரிசோதித்து விட்டு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற ஸ்ரீரங்கம் இனாம்புலியூர் கீழமேடு பகுதியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன்( 23) என்ற இளைஞரும் படுகாயம் அடைந்தார். திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து குறித்து சோமரசம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெ–க்டர் வீரமணி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 7ம் வகுப்பு மாணவி மோட்டார் சைக்கிள் மோதி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News