உள்ளூர் செய்திகள்
இலங்கையைச் சேர்ந்தவர் திடீர் மரணம்
- உறையூர் சீனிவாச நகரில் இலங்கையைச் சேர்ந்தவர் திடீர் மரணம்
- உடனே அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தன
திருச்சி
இலங்கை கொழும்பு கிராண்ட் பாத் வீதியைச் சேர்ந்தவர் ராஜா ரத்தினம் (வயது 54 ).இவர் நோய்வாய்ப்பட்டு இலங்கையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு திருச்சி உறையூர் சீனிவாச நகரில் உள்ள சகோதரி வீட்டுக்கு வந்தார். இங்கு வந்த இடத்தில் உடல்நிலை மோசமாகி சுயநினைவு இழந்தார். உடனே அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மனோரஞ்சிதம் கொடுத்த புகாரின் அடிப்படையில் உறையூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.