- அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் உயிரிழப்பு
- மணப்பாறை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை
திருச்சி,
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே அடையாளம் தெரியாத வாகன மோதிய விபத்தில் தனியார் தொழில் நுட்ப பயிற்சி கல்லூரி ஆசிரியர் உயிரிழந்தார்.மணப்பாறையை அடுத்த மலையடிப்பட்டியில் வசித்து வந்தவர் ஆரோக்கியம் மகன் சேசுசகாயராஜ் (வயது 54). இவர். நவலூர் குட்டப்பட்டு பகுதியில் உள்ள தனியார் தொழில்நுட்ப பயிற்சி கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.இந்நிலையில் நேற்று தனது இருசக்கர வாகனத்தில் திண்டுக்கல்-திருச்சி தேசிய நெடுஞ்சாலை மரவனூர் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் இவர் மீது மோதியது. இதில் சேசுசகாயராஜ் படுகாயம் அடைந்தார்.பலத்த காயம் அடைந்த அவரை, அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து மணப்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.