உள்ளூர் செய்திகள் (District)

திருச்சி டாஸ்மாக் பாரில் மது அருந்திய வாலிபர் மயங்கி விழுந்து சாவு

Published On 2023-02-28 09:05 GMT   |   Update On 2023-02-28 09:05 GMT
  • திருச்சி டாஸ்மாக் பாரில் மது அருந்திய வாலிபர் மயங்கி விழுந்து பலியானார்
  • இதுகுறித்து கன்டோன்மெண்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி:

திருச்சி பிராட்டியூர் கிழக்குத் தெரு காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வேம்படி. இவரது மகன் பிரசாந்த் (வயது 28). குடிப்பழக்கம் உடையவர். திருமணமாகவில்லை. இவர் திருச்சி-திண்டுக்கல் சாலையில் கருமண்டபம் பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் பாரில் பகல் முழுவதும் இருந்து மது அருந்தி உள்ளார். அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால் மயங்கி விழுந்தார். உடனே அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் டாக்டர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கன்டோன்மெண்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




Tags:    

Similar News