உள்ளூர் செய்திகள் (District)

தா.பேட்டை அரசு பள்ளியில் பூட்டை உடைத்து கம்ப்யூட்டர் திருட்டு

Published On 2023-03-01 10:34 GMT   |   Update On 2023-03-01 10:34 GMT
  • தா.பேட்டை அரசு பள்ளியில் பூட்டை உடைத்து கம்ப்யூட்டர் திருட்டு போனது
  • புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிந்து ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள கம்யூட்டரை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்

தா.பேட்டை,:

தா.பேட்டை அடுத்த துலையாநத்தம் கிராமத்தில் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியின் தலைமையாசிரியர் முருகேசன் (வயது54) வழக்கம்போல் பள்ளியை முடித்து விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். மறுநாள் காலை பள்ளியை திறக்க வந்த போது கதவின் பூட்டுகள் உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பள்ளியில் இருந்த கம்ப்யூட்டர், பிரிண்டர் உள்ளிட்டவைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.

இதையடுத்து தலைமை ஆசிரியர் முருகேசன் இதுகுறித்து ஜெம்புநாதபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிந்து ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள கம்யூட்டரை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர். அரசு பள்ளியில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கம்ப்யூட்டரை திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Tags:    

Similar News