உள்ளூர் செய்திகள் (District)

விஷப்பாம்பு கடித்ததில் பெண் உயிரிழந்தார்

Published On 2023-03-22 08:55 GMT   |   Update On 2023-03-22 08:55 GMT
  • ருச்சி பி.கே.அகரம் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் பணியாற்றியபோது பாம்பு கொத்தியது
  • சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்த பரிதாபம்
திருச்சி,

திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி ஒன்றியம்பி.கே. அகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி. இவருடைய மனைவி கலையரசி. மகாத்மா காந்தி தேசிய ஊரக 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் பி. கே. அகரத்தில் உள்ள சோள குட்டை வரத்து வாரியில் வேலை செய்து கொண்டு இருக்கும் போது விஷப்பாம்பு கடித்தது.இதில் கலையரசி மயங்கி விழுந்தார். இதுகுறித்து 108 ஆம்புலன்ஸ்க்கு தேசிய ஊரக வேலைவாய்ப்பு பொறுப்பாளர்கள் தகவல் கொடுத்தனர். அங்கு வந்த 108 ஆம்புலன்ஸ் மூலம் கலையரசியை திருச்சி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். சிறுகனூர் போலீசார் உடலை கைப்பற்றி, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags:    

Similar News