- இடி தாக்கியதில் 3 பசு மாடுகள் பலியானது
- 3 பசுமாடுகள் ஒரே நேரத்தில் இந்தது அப்பகுதி மக்களிடையே பரபரப்பு ஏற்படடு உள்ளது.
உப்பிலியபுரம்,
திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த உப்பிலியபுரத்தை அடுத்துள்ள பாதர்பேட்டை ஊராட்சி கீழப்பட்டியைச் சேர்ந்தவர் சந்திராமூர்த்தி. உப்பிலியபுரம் ஒன்றியம் 15-வது வார்டு கவுன்சிலராக உள்ளார். விவசாயியான இவர் தனது கணவருடன் சொந்த தோட்டத்தில் கால்நடைகளையும் வளர்த்து வருகிறார். நேற்று மாலை கால்நடைகள் மேய்ச்சலையடுத்து தோட்டத்திலிருந்த வேப்பமரத்தின் அருகே 3 பசு மாடுகளையும் கட்டிவிட்டு வீடு திரும்பியுள்ளனர். அப்பகுதியில் பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்தது. இன்று காலை தோட்டத்திற்கு சென்றவர்கள் 3 பசுமாடுகளும் இடிதாக்கி இறந்து கிடந்தது கண்டு அலறினர். சுமார் ஒரு லட்சம் மதிப்புள்ள சினை மாடு உள்பட 3 பசுக்களும் வேப்பமரத்தை தாக்கிய இடியால் இறந்து கிடந்தது தெரிய வந்ததன் பேரில் அப்பகுதியில் பொது மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுபற்றிய தகவல் வருவாய்துறையினர், காவல்துறையினர், கால்நடைத்துறையினருக்கு தகவல் அளித்ததின் பேரில் எ.பாதர்பேட்டை கிராம நிர்வாக அலுவலர் சின்னதம்பி, உப்பிலியபுரம் வருவாய் ஆய்வாளர் கீதா, எரகுடி கால்நடைத்துறை மருத்துவர் ஆனந்த், உப்பிலியபுரம் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். இடி தாக்குதலால் 3 பசுக்களும் இறந்தது அப்பகுதியிலுள்ள கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.