உள்ளூர் செய்திகள் (District)

பெண்களிடம் தகறாரில் ஈடுபட்ட 3 பேர் கைது

Published On 2023-05-16 07:49 GMT   |   Update On 2023-05-16 07:49 GMT
  • திருச்சி முக்கொம்பு சுற்றுலாதலத்தில் இடையூறு
  • 3 வாலிபர்களை கைது செய்து போலீசார் விசாரணை

திருச்சி,

கோவை கே.கே.புதூர் மணியன் மருதகுட்டி வீதி பகுதியைச் சேர்ந்தவர் விக்டர் ராஜ். இவரது மனைவி முத்துலட்சுமி (வயது 35). இவர் தனது உறவினர்களுடன் திருச்சி முக்கொம்பு சுற்றுலா மையத்திற்கு வந்துள்ளார். பின்னர் அணைக்கட்டு பகுதி, பூங்கா உள்ளிட்ட இடங்களை சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த 3 வாலிபர்கள் அவரிடம் தேவையில்லாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை தட்டிக்கேட்ட முத்துலட்சுமியின் உறவினர்களிடமும் தகராறு செய்தனர். மேலும் முத்துலட்சுமியை கைகளால் தாக்கி கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக ஜீயபுரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து மூன்று வாலிபர்களையும் பிடித்து கைது செய்தனர். விசாரணையில் கைதானவர்கள் திருச்சி எலமனூர் பகுதியைச் சேர்ந்த சங்கிலி என்கிற தேவா (19), முனீஸ்வரா (19), வினித் (19) என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News