உள்ளூர் செய்திகள்
- தன் நண்பர் பிரபாகரணை தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு தன் சொந்த ஊரான ஆக்கூர் சென்று கொண்டிருந்தார்.
- கதிராமங்கலம் அருகே மகாராஜபுரம் பஸ் நிலையம் அருகில் எதிரே வந்த மீன்பாடி வாகனம் மோதி படுகாயம் அடைந்தனர்.
கும்பகோணம்:
செம்பனார்கோவில் அருகே ஆக்கூர் வ.ஊ.சி. நகரை சேர்ந்தவர் மாரிஸ் (வயது 20). இவர் செம்பனார்கோவிலில் இருந்து அய்யம்பேட்டைக்கு சென்று விட்டு தன் நண்பர் பிரபாகரணை தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு தன் சொந்த ஊரான ஆக்கூர் சென்று கொண்டிருந்தார்.
அப் போது கதிராமங்கலம் அருகே மகாராஜபுரம் பேருந்து நிலையம் அருகில் எதிரே வந்த மீன்பாடி வாகனம் மோதி படுகாயம் அடைந்தனர். அதில் சம்பவ இடத்திலேயே மாரிஸ்உயிரிழந்தார். அருகில் இருந்தவர்கள் பிரபாகரனை மீட்டுஆம்புலன்ஸ் மூலம் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்பிசை பலனின்றி இறந்தார். இது குறித்து கண்ணனூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.