உள்ளூர் செய்திகள் (District)

சேதமடைந்துள்ள வைகையாற்று பாலத்தை படத்தில் காணலாம்.

வருசநாடு அருகே பராமரிப்பு பணிகள் இல்லாததால் அபாய நிலையில் வைகையாற்று பாலம்

Published On 2023-10-31 04:23 GMT   |   Update On 2023-10-31 04:23 GMT
  • முருக்கோடை-ராயர்கோட்டை இடையே மூலவைகையாற்றின் குறுக்கே 10 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.4 கோடி மதிப்பீட்டில் புதிய பாலம் கட்டப்பட்டது.
  • பராமரிப்பு பணி இல்லாததால் பாலம் தொடர்ந்து சேதமடைய தொடங்கியுள்ளது. குறிப்பாக பாலத்தின் கீழ்பகுதியில் தூண்கள் அமைந்துள்ள இடத்தில் சிமிண்ட் பூச்சு உடைந்து வருகிறது.

வருசநாடு:

தேனி மாவட்டம் வருசநாடு அருகே உள்ள அரசரடி, வெள்ளிமலை உள்ளிட்ட பகுதிகள் வைகை அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக உள்ளது. பருவமழை காலங்களில் போதிய மழை பெய்தால் மட்டுமே இப்பகுதி விவசாயிகளுக்கும், குடிநீருக்கும் பற்றாக்குறை இல்லாத நிலை உருவாகும.

முருக்கோடை-ராயர்கோட்டை இடையே மூலவைகையாற்றின் குறுக்கே 10 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.4 கோடி மதிப்பீட்டில் புதிய பாலம் கட்டப்பட்டது. இந்த பாலம் பயன்பாட்டிற்கு வந்து 9 ஆண்டுகள் ஆகியும் எந்தவித பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை.

இதனால் பாலம் தொடர்ந்து சேதமடைய தொடங்கியுள்ளது. குறிப்பாக பாலத்தின் கீழ்பகுதியில் தூண்கள் அமைந்துள்ள இடத்தில் சிமிண்ட் பூச்சு உடைந்து வருகிறது. இதனைசீரமைக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் சிமிண்ட் பூச்சு உடைப்பு பெரிதாகி உள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. அந்த சமயங்களில் மண் அரிப்பு அதிகமாகி பாலத்தின் தூண்பகுதியும் சேதமடையும் சூழல் உள்ளது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பாலத்தில் சீரமைப்பு பணிகள் உடனடியாக மேற்கொள்ளவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News