உள்ளூர் செய்திகள்

சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு 2-வது நாளாக உடற் தகுதி தேர்வு

Published On 2023-11-08 07:46 GMT   |   Update On 2023-11-08 07:46 GMT
  • வேலூர் நேதாஜி மைதானத்தில் நடந்தது
  • கேமரா காட்சிகள் கண்காணிக்கப்பட்டது

வேலூர்:

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு. வாரியத்தின் மூலம், சப்- இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்புவ தற்கான போட்டித் தேர்வு கடந்த ஆகஸ்டு மாதம் மாநிலம் முழுவதும் நடந்தது.

இதில் ஆயுதப்படை, தாலுகா மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல் படைகளில் காலியாக உள்ள 464 ஆண்கள் மற்றும் 152 பெண்கள் உள்பட மொத்தம் 621 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் இந்த போட்டித்தேர்வு மூலம் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மேலும் தற்போது காவல்துறை பணியில் உள்ளவர்களும் இப்போட்டித் தேர்வில் 20 சதவீத பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் தேர்வில் வெற்றி பெற்ற ஆண்களுக்கு உடற்தகுதி தேர்வு நேற்று வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் தொடங்கியது.

இதில் மொத்தம் 513 பேர் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் முதல் நாளான நேற்று 453 பேர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு உயரம், மார்பளவு, 1500 மீ ஓட்டமும் நடந்தது. இந்த முதற்கட்ட உடற் தகுதி தேர்வில் 359 பேர் தேர்ச்சி பெற்றனர்.

2-வது நாளான இன்று காலை 6 மணி அளவில் தீவிர பரிசோதனைக்கு பிறகு தேர்வர்களை உள்ளே அனுமதித்தனர். முதல் நாளான நேற்று தேர்ச்சி பெற்ற பொது பிரிவை சேர்ந்த 204 பேருக்கு 2-ம் கட்டமாக கயிறு ஏறுதல், உயரம், நீளம் தாண்டுதல், 100 மீ, 400 மீ ஓட்டம் உள்ளிட்டவை நடந்தது.

வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி தலைமையில் எஸ்.பி. மணிவண்ணன் மேற்பார்வையில் ஏ.டி.எஸ். பி.கள், டி.எஸ்.பி.கள், காவல்துறை அதிகாரிகள், மற்றும் அமைச்சுப்பணி யாளர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

வேலூர் தேர்வு மையத்தின் கண்காணிப்பு அலுவலராக அதிரடி படை ஐ.ஜி.முருகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தேர்வு நடைபெறும் அனைத்து பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த ப்பட்டு கண்கா ணிக்கப்பட்டது.

Tags:    

Similar News