உள்ளூர் செய்திகள் (District)

வேலூர் மாவட்டத்தில் 6 பேருக்கு டெங்கு பாதிப்பு

Published On 2023-10-26 09:06 GMT   |   Update On 2023-10-26 09:06 GMT
  • அரசு மருத்துவமனையில் சிகிச்சை
  • காய்ச்சல் வார்டுகளை தயார் நிலையில் வைத்துள்ளனர்

வேலூர்:

வேலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 6 பேர் பாதிக் கப்பட்டு வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனை மற்றும் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிக ரித்துள்ளது. இதனால் அனைத்து மாவட்டங்களிலும் சுகாதாரத்துறையும், உள்ளாட்சி அமைப்புகளும் தீவிர தடுப்பு நடவடிக்கை களை மேற்கொண்டுள்ளன.

அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் அரசு மருத்துவமனைகள் டெங்கு பாதிப்புக்குள்ளான வர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் காய்ச்சல் வார்டுகளை தயார் நிலையில் வைத்துள்ளன.

இந்த நிலை யில் வேலூர் மாவட்டத்தில் வேலூர் கொசப்பேட்டை யில் நேற்று ஒருவர் உட்பட 4 பேர் பாதிக்கப்பட்டு வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதே போல் குடியாத்தத்தில், 22 வயது மற்றும் 25 வயது கொண்ட ஆண்கள் 2 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு அங்குள்ள அரசு மருத்துவம னையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News