உள்ளூர் செய்திகள்

தீர்வு காணப்படாத வழக்குகளில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும்

Published On 2023-09-02 09:37 GMT   |   Update On 2023-09-02 09:37 GMT
  • போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் தகவல்
  • 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்

வேலூர்:

வேலூர் மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் நீண்ட நாட்கள் கிடப்பில் உள்ள வழக்குகளில் தீர்வு காண்பதற்காக வேலூர், காட்பாடி, குடியாத்தம் சப் டிவிஷன்களில் சிறப்பு குறை தீர்வு முகம் இன்று நடந்தது.

வேலூர் கோட்டை சுற்றுசாலையில் உள்ள காவலர் திருமண மண்டபத்தில் நடந்த குறைதீர்வு முகாமை வேலூர் போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் தொடங்கி வைத்தார்.

வழக்கு சம்பந்தப்பட்ட 200-க்கும் மேற்பட்டவர்கள் முகாமில் கலந்து கொண்டனர். பின்னர் போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் கூறுகையில் அந்தந்த சப் டிவிஷனில் உள்ள டிஎஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர்கள் முன்னிலையில் நீண்ட நாள் தீர்வு காணப்படாத வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

வழக்கு சம்பந்தப்பட்ட 2 தரப்பை சேர்ந்தவர்களையும் வரவழைத்து விசாரணை நடத்தி காணப்படுகிறது. தீர்வு காணப்படாத வழக்குகளில் மேல் நடவடிக்கை எடுப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News