உள்ளூர் செய்திகள் (District)

வேலூரில் லியோ சிறப்பு காட்சி குறித்து தியேட்டர்களுக்கு கட்டுப்பாடு

Published On 2023-10-16 09:19 GMT   |   Update On 2023-10-16 09:19 GMT
  • கலெக்டர் குமாரவேல் பாண்டியன் எச்சரிக்கை
  • ஒரு நாளைக்கு அதிகபட்சம் 5 காட்சிகள் மட்டுமே காண்பிக்கப்பட வேண்டும்

வேலூர்:

வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வேலூர் மாவட்டத்தில் லியோ திரைப்படத்தினை திரையிடும் திரை யரங்குகளில் 19.10.2023 முதல் 24.10.2023 வரை கூடுதலாக சிறப்புக் காட்சி (ஒரு நாளைக்கு அதிகபட்சம் 5 காட்சிகள்) நடத்திடவும், தொடக்க காட்சி காலை 9 மணிக்கும் கடைசி காட்சி அடுத்த நாள் அதிகாலை 1.30 மணிக்கும் முடிவடையும் வகையில் திரையிடுமாறு அரசு ஆணைகள் வெளிட்டுள்ளன.

திரையரங்க உரிமை யாளர் திரையரங்கில் சுகாதார குறைபாடுகள் மற்றும் கூட்ட நெரிசல் ஏதும் ஏற்படாத வண்ணமும், திரைப்படம் காண்போரின் போக்குவரத்து உள்வருதல் வெளியேறுதல் வாகனம் நிறுத்துதல் மற்றும் இயக்குதல் பாதிக்கப்படாத வகையிலும், காவல் துறையினரின் ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பு பெறு வதற்கு தக்க ஏற்பாடுகள் செய்து கொள்ள வேண்டும்.

மேலும் மக்கள் மற்றும் பார்வையாளர்கள் சிரமமின்றி உள்ளே வரவும், வெளியேறவும் இருக்கை கள் மற்றும் திரையரங்க வளாகத்தினை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும்.

திரையரங்குகளை சுகாதாரமாக பராமரிக்க போதுமான கால இடை வெளியுடன் உரிய பாது காப்பு நடைமுறை களுடன் சிறப்பு காட்சி நடத்தப்பட வேண்டும்.

அரசு நிர்ணயித்துள்ள கட்டணம் மற்றும் பார்கிங் கட்டணம் ஆகியவற்றினை கடைபிடிக்கவும் விதிமீ றல்கள் இருப்பின் பொது மக்கள் வருவாய் கோட்ட அலுவலர், வேலூர்- 9445000417, வருவாய் கோட்ட அலுவலர், குடியாத்தம் - 9442999120, தாசில்தார்கள் வேலூர்- 9445000508, காட்பாடி - 9445000510. குடியாத்தம்- 9445000509, பேர்ணா ம்பட்டு- 9486064172 ஆகியோர்களுக்கு புகார் தெரி விக்கலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News