உள்ளூர் செய்திகள்

சென்னை சென்ட்ரல் - ஜோலார்பேட்டை இடையே 145 கி.மீ.வேகத்தில் ரெயில் சோதனை ஓட்டம்

Published On 2023-01-12 09:54 GMT   |   Update On 2023-01-12 09:54 GMT
  • பாலாறு, பொன்னையாறு பாலங்களின் தன்மை குறித்து ஆய்வு
  • கூடுதலாக ரெயில்களை இயக்க வசதியாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்

வேலூர்:

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து அரக்கோணம் காட்பாடி ஜோலார்பேட்டை வழியாக தினமும் 120-க்கும் மேற்பட்ட ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

பெங்களூரு கோவை கேரளா மற்றும் வட மாநிலங்களுக்கு இந்த வழியாக ரெயில்கள் இயக்கப்படுகிறது.

தமிழகத்தில் அதிக பட்சமாக ரெயில்களின் வேகம் 110 கிலோமீட்டர் வரை உள்ளது. சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திலிருந்து டெல்லி மற்றும் வட மாநி லங்களுக்கு செல்லக்கூடிய ஒரு சில ரெயில்களில் வேகம் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திலிருந்து திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை வரை ரெயில்களில் வேகத்தை 145 கிலோ மீட்டர் வரை அதிகரிக்க ரெயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து இன்று மதியம் சென்னை சென்ட்ரலில் இருந்து ஜோலார்பேட்டை வரை ரெயில் என்ஜின் மூலம் 145 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கி சோதனை நடத்தப்ப ட்டது. இதில் தெற்கு ரெயில்வே அதிகாரிகள் மற்றும் என்ஜினியர்கள் கலந்து கொண்டனர்.

இந்த சோதனை ஓட்டத்தின் போது தண்டவாளத்தின் அதிர்வு தன்மை மற்றும் சென்னை ஜோலார்பேட்டை இடையே உள்ள பாலாறு பொன்னை யாறு பாலங்களில் தன்மை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

தற்போது தமிழகத்தில் உள்ள ரெயில்களை அதிகபட்சமாக 130 கிலோமீட்டர் வேகம் வரை இயக்க முடியும். தற்போது இன்னும் அதி வேகமாக செல்லக்கூடிய ரெயில் என்ஜின் மற்றும் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த சோதனை ஓட்டம் வெற்றிகரமாக அமைந்தால் விரைவில் சென்னை சென்ட்ரல் முதல் ஜோலார்பேட்டை வரை ரெயில்கள் 130 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படும்

சென்னை சென்ட்ரலில் இருந்து ஜோலார்பேட்டை வரை அதிவேகத்தில் ரெயில்கள் இயக்கப்படும் போது பெங்களூர் கேரளா கோவை மார்க்கமாக செல்லும் ரெயில்கள் இன்னும் விரைவாக சென்றடைந்து விடும்.

மேலும் குறித்த நேரத்தில் ரெயில்களை இயக்க முடியும். கூடுதலாக ரெயில்களை இயக்க வசதியாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News