உள்ளூர் செய்திகள் (District)

வெட்டுவானம் கோவில் முன்பு நிறுத்திய பைக் திருட்டு

Published On 2023-09-21 10:39 GMT   |   Update On 2023-09-21 10:39 GMT
  • கேமராக்களை சீரமைக்க வலியுறுத்தல்
  • திருட்டு நடைபெறாதவாறு கண்காணிக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தல்

அணைக்கட்டு:

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த நடராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 26) இவர் தனது பைக்கில் நேற்று முன்தினம் வெட்டுவானம் எல்லை யம்மன் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய சென்றார்.

அப்போது இவரது வாகனத்தை கோவிலுக்கு முன்பு நிறுத்திவிட்டு உள்ளே சென்று சாமி தரிசனம் செய்து முடித்துவிட்டு மீண்டும் வெளியே வந்தார். அதற்குள் பைக்கை திருடி சென்று விட்டனர்.

அதிர்ச்சியடைந்த சந்தோஷ் உடனடியாக அருகில் உள்ள பல்வேறு இடங்களில் தேடினார்.

இது குறித்து பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சந்தோஷ் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இது குறித்து பக்தர்கள் கூறுகையில்

கோவிலை சுற்றிலும் 16-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன தொடர்ந்து கண்காணிப்பு கேமராக்கள் சரிவர வேலை செய்யவில்லை. இது திருட்டு நடைபெறுவதற்கு காரணமாக அமைவதாக பக்தர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

கோவில் நிர்வாகம் கண்காணிப்பு கேமராக்களை சரி செய்வதுடன் கூடுதலாக கேமராக்கள் பொருத்தி திருட்டு நடைபெறாதவாறு கண்காணிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேபோன்று கடந்த மாதம் கோவிலுக்கு வந்த பெண் பக்தரின் கழுத்தில் இருந்து சுமார் 10 பவுன் தங்க நகை மற்றும் மூதாட்டியின் கழுத்திலிருந்த 3 பவுன் தங்க சங்கிலி திருடப்பட்டதும் கண்காணிப்பு கேமராக்கள் சரிவர இல்லாததால் கண்டு பிடிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News