உள்ளூர் செய்திகள்

குண்டும் குழியுமான சாலை.

கீழ் அரசம்பட்டில் குண்டும் குழியுமான சாலையால் கடும் அவதி

Published On 2023-10-05 07:23 GMT   |   Update On 2023-10-05 07:23 GMT
  • 5 ஆண்டுகளாக பராமரிப்பின்றி பழுத டைந்து காணப்படுகிறது
  • மழைநீர் செல்ல கால்வாய் அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

அணைக்கட்டு:

வேலூர் மாவட்டம், கணியம்பாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழ் அரசம்பட்டு கிராமத்தில் சுமார் 3000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் தார்சாலை அமைக்கப்பட்டது.

இந்த சாலை கடந்த 5 ஆண்டுகளாக பராமரிப்பின்றி பழுத டைந்து காணப்படுகிறது.மேலும் சாலையில் அங்கங்கே ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக போக்கு வரத்துக்கு லாயக்காற்ற நிலையில் கிடக்கிறது.

மழை காலங்களில் சாலையில் உருவான பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதிய டைந்து வருகின்றனர்.

ரெட்டிபாளையம் முருகர் கோவில், கீழ்புதூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், ஆரணி மற்றும் கண்ணமங்கலம் செல்லும் பொது மக்கள் இந்த சாலையை தான் அதிகம் பயன்படுத்து கின்றனர்.

மேலும் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவ- மாணவிகள், வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் மற்றும் ஆஸ்பத்திரி செல்லும் நோயாளிகள் கடும் சிரமத்துடன் சாலையை கடந்து செல்கின்றனர்.

மேலும் சாலையில் கற்கள் ஆங்காங்கே பெயர்ந்து இருப்பதால் இதன் வழியாக செல்லும் வாகனங்கள் சில அடிக்கடி பஞ்சர் ஆகி பாதியில் நிற்பதோடு, விபத்துகளும் அதிக அளவில் ஏற்படுகிறது.

புதிய சாலை அமைப்போடு, மழைநீர் செல்ல கால்வாய் அமைத்து தர வேண்டும் என பல முறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே சாலையை புதுப்பிப்ப தோடு, மழைநீர் செல்ல கால்வாய் அமைக்க வேண்டு மென பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News