உள்ளூர் செய்திகள் (District)

வலங்கைமானில் கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது.

வலங்கைமானில் கிராமமக்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2023-11-23 09:45 GMT   |   Update On 2023-11-23 10:22 GMT
  • வலங்கைமான் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது
  • மகளிர் சுகாதார கழிவறையை சீரமைக்க வேண்டும்

நீடாமங்கலம்:

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வலங்கைமான் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். ஆர்பாட்டத்தில் வலங்கைமான் அருகே உள்ள பெருங்குடி கிராமத்தில் வடக்கு தெரு சாலை, மேலத் தெரு சாலை, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு செல்லக்கூடிய சாலை ஆகியவை மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

இதனால் மழைக்கா லங்களில் பொதுமக்கள் பள்ளி செல்லும் மாணவ மாணவிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

எனவே சாலையை சீரமைத்து தரவேண்டும்.

மேலும் அங்குள்ள மகளிர் சுகாதார கழிவறையை சீரமைக்க கோரியும், பழுதடைந்த மின் கம்பங்களை மாற்றித் தரக் கூறியும், நீர்த்தேக்க தொட்டியை மாதந்தோறும் முறையாக சுத்தம் செய்து தரவேண்டும் போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் கிராம மக்களுடன் தமிழக மக்கள் முன்னேற்ற கழக கட்சி திருவாரூர் வடக்கு மாவட்ட தலைவர் முருகேஷ் மற்றும் அகில இந்திய தேவேந்திரர் குல வேளாளர் சங்கம், மகளிர் சுய உதவிக் குழுக்கள் மற்றும் இளைஞர் நற்பணி மன்றத்தினர் ஆகியோர்களும் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அசம்பாவிதங்களை தவிர்க்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.

Tags:    

Similar News