உள்ளூர் செய்திகள் (District)

3 பேர் மாயம்

Published On 2022-08-30 07:57 GMT   |   Update On 2022-08-30 07:57 GMT
  • கல்லூரி மாணவி உள்பட 3 பேர் மாயமானார்கள்.
  • ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விருதுநகர்

சிவகாசி அருகே உள்ள ஆலமரத்துப்பட்டியை சேர்ந்தவர் மாசாணமுத்து. இவரது மகள் மாரீஸ்வரி (20). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்ற மாரீஸ்வரி பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் பலனில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் கீழபட்டியை சேர்ந்தவர் மோகனலட்சுமி (22). தையல் முடித்திருந்த இவர் சம்பவத்தன்று திடீரென மாயமானார். இதுகுறித்து அவரது தந்தை பசுபதி கொடுத்த புகாரின் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விருதுநகர் அருகே உள்ள பாவாலி காமாட்சி நகரை சேர்ந்தவர் வளர்மதி. இவரது மகள் முத்துலட்சுமி (25). இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்று வீட்டிலிருந்த முத்துலட்சுமி திடீரென மாயமானார். இதுகுறித்து அவரது தாயார் ஆமத்தூர் போலீசில் புகார் செய்தார். அதில் உறவினர் குமார் என்பவருடன் மகள் சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News