உள்ளூர் செய்திகள் (District)

விளையாட்டு போட்டியில் கிரிக்கெட் சேர்ப்பு

Published On 2023-01-26 06:48 GMT   |   Update On 2023-01-26 06:48 GMT
  • முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டியில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ளது.
  • முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளுக்கு இணைதளத்தில் வருகிற 29-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

விருதுநகர்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் விருதுநகர் மாவட்டத்தில் மாவட்ட அளவிலான தமிழ்நாடு முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது.

இந்த விளையாட்டு போட்டிகள் 5 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் தொடர்பான தகவல்கள் இணைதளத்தில் பதிவதற்கு வசதிகள் செய்யப்பட்டு உள்ளது.

தற்போது கிரிக்கெட் விளையாட்டு போட்டி பள்ளி, கல்லூரி மற்றும் பொது பிரிவினர் கலந்து கொள்ளும் வகையில் புதியதாக சேர்க்கப்பட்டுள்ளது.

எனவே விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள் மற்றும் பொது பிரிவினர் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி கிரிக்கெட் விளையாட்டில் பங்கேற்கலாம்.

இதற்கு, தங்கள் அணி யினரை www.sdat.tn.gov.in என்ற இணைதள முக வரியில் பதிவு செய்து விருதுநகர் மாவட்ட வீரர்-வீராங்கனைகள் பெருமள வில் கலந்து கொண்டு பயன்பெறலாம்

முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளை யாட்டு போட்டிகளுக்கு இணைதளத்தில் வருகிற 29-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News