உள்ளூர் செய்திகள்

வியாபாரிகள் மீது வழக்கு

Published On 2022-08-14 09:18 GMT   |   Update On 2022-08-14 09:18 GMT
  • விருதுநகர் மாவட்டத்தில் பொட்டல பொருட்களை கூடுதல் விலைக்கு விற்ற 16 வியாபாரிகள் மீது வழக்கு தொழிலாளர் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
  • விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) காளிதாஸ் தெரிவித்துள்ளார்.

விருதுநகர்

சென்னை தொழிலா ளர் துறை ஆணையர் அதுல் ஆனந்த் ஆணையின்படி யும், மதுரை கூடுதல் தொழி லாளர் ஆணையர் குமரன் ஆலோசனையின்படியும், இணை ஆணையர் சுப்பிரமணியன் வழிகாட்டு தலின்படியும், விருதுநகர் தொழிலாளர் துறை உதவி ஆணையர் (அமலாக்கம்) காளிதாஸ் தலைமையில் துைண ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் அடங்கிய குழுவினர் விருதுநகர் மாவட்டத்தில் 2 நாட்கள் சோதனை நடத்தினர்.

அப்போது பொட்டல பொருட்கள் விதிகளின் கீழ் பதிவு சான்று பெறாமல் உள்ள பொட்டலமிடுபவர், இறக்குமதியாளர்கள், அறிவிப்பு இல்லாமல் பொட்டலபொருட்களை விற்பனைசெய்தல் மற்றும் அதிகபட்ச சில்லரை விற்பனை விலையை விட கூடுதல் விலைக்கு பொட்டல பொருட்களை விற்பனை செய்தல் தொடர்பாக இந்த சோதனை நடந்தது.

பொட்டல பொருட்க ளில் உரிய விவரங்கள் குறிப்பிடாமல் விற்பனைக்கு வைத்திருந்த 13 வியாபாரிகள் மீதும், பொட்டலமிடுபவர், இறக்குமதியாளர்கள் பதிவு சான்று பெறாமல் உள்ள 2 வியாபாரிகள் மீதும், அதிகபட்ச சில்லரை விற்பனை விலையை விட கூடுதல் விலைக்கு பொட்டல பொருட்களை விற்பனை செய்த ஒரு வியாபாரி மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த வழக்கில் முதலாவது குற்றத்துக்கு ரூ.25 ஆயிரம் வரை அபராதமும், 2-ம் முறை குற்றத்துக்கு ரூ.50 ஆயிரம் வரை அபராமும், அதற்கு மேற்பட்ட குற்றத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம் மற்றும் ஒரு ஆண்டு சிறை தண்டனை அல்லது இரண்டும் சேர்த்து நீதிமன்றத்தின் மூலம் விதிக்க வழிவகை உள்ளது.

இந்த சோதனையில் சிவ காசி தொழிலாளர் துைண ஆய்வாளர்கள் முத்து, சதாசிவம் மற்றும் விருதுநகர், அருப்புக்கோட்டை, சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், உசிலம்பட்டி தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் தயாநிதி, உமாமகேஸ்வரன், துர்கா, சிவசங்கரி ஆகியோர் பங்கேற்றனர்.

மேற்கண்ட தகவலை விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) காளிதாஸ் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News