உள்ளூர் செய்திகள்

நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கு

Published On 2023-03-02 08:12 GMT   |   Update On 2023-03-02 08:12 GMT
  • விருதுநகரில் நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.
  • மாணவர்களின் சந்தேகங்களுக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதிலளித்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர்

விருதுநகர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர்- நுகர்வோர் நீதிபதி சேகர் தலைமையில் நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகம் மாவட்ட நுகர்வோர் ஆைணயத்தில் நடந்தது.

மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய உறுப்பினர்கள் சவுந்தரராஜன், சாந்தி ஆண்டியப்பன், கிருஷ்ணப்பேளளரி காமாக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், நுகர்வோர் பாதுகாப்பு சேவை மையத்தின் மாநில தலைவர் சுப்பிரமணியன் மற்றும் அலுவலக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கருத்தரங்கில் தலைவர் நுகர்வோர் பாதுகாப்பு சட்டடத்தில் உள்ள சிறப்பு அம்சங்களை விளக்கினார். நுகர்வோர் ஆணையத்தில் எவ்வாறு நுகர்வோர் பயனடையலாம்? என்பதை பற்றியும் விளக்கமளித்தார்.

மாணவர்களின் சந்தேகங்களுக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதிலளித்தனர். எந்த ஒரு நுகர்வோரும் எளிமையாக வழக்கு தொடரலாம் என்றும் கூறினர்.

Tags:    

Similar News