உள்ளூர் செய்திகள் (District)

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஓட்டுநர்கள். 

போலீசார் அபராதம் விதிப்பதை கண்டித்து ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2022-12-01 08:16 GMT   |   Update On 2022-12-01 08:16 GMT
  • ராஜபாளையத்தில் போலீசார் அபராதம் விதிப்பதை கண்டித்து ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
  • டாஸ்மார்க் கடையில் உள்ள பார்கள் 24 மணி நேரமும் செயல்படுகிறது. அதை கண்டு கொள்ளவில்லை என ஆர்ப்பாட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

ராஜபாளையம்

ராஜபாளையம் மற்றும் சுற்று வட்டார கிராம பகுதிகளான தளவாய்புரம், முகவூர், செட்டியார்பட்டி, தேவதானம் , சத்திரப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் காவல்துறை அத்து மீறி அபராதம் விதிப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஜவகர் மைதானத்தில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தின்போது ராஜபாளையம் காவல்துறை தமிழகத்தில் எங்கும் இல்லாத அளவிற்கு 2 கிலோ மீட்டருக்கு ஒரு இடத்தில் நின்று ஆன்லைன் அபராத கட்டண வசூல் செய்கின்றனர் என குற்றம் சாட்டினர்.

ராஜபாளையத்தில் சாலை வசதிகள் சரி செய்யவில்லை. ஆனால் வசூலில் தீவிரம் காட்டும் காவல்துறை சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோல் ராஜபாளையம் நகர் பகுதி முழுவதும் நூற்பாலைகள் அதிக அளவில் உள்ளது. இரவு நேரங்களில் டீக்கடைகள் திறந்தால் சட்டவிரோத செயல்கள் நடைபெறும் எனக்கூறி டீக்கடைகளை திறங்க எதிர்ப்பு தெரிவிக்கும் காவல்துறை நகர் முழுவதும் டாஸ்மார்க் கடையில் உள்ள பார்கள் 24 மணி நேரமும் செயல்படுகிறது. அதை கண்டு கொள்ளவில்லை என ஆர்ப்பாட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் தொடர்ந்து இதுபோன்று செயல்களில் ஈடுபட்டால் ஓட்டுநர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவ கத்தில் வாகனங்களை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்தனர்.

Tags:    

Similar News