உள்ளூர் செய்திகள்

விவசாயி-தொழிலாளி தற்கொலை

Published On 2023-06-08 07:45 GMT   |   Update On 2023-06-08 07:45 GMT
  • அருப்புக்கோட்டை அருகே விவசாயி-தொழிலாளி தற்கொலை செய்து கொண்டனர்.
  • சாத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர்

அருப்புக்கோட்டை அருகே உள்ள கள்ளுமடத்தை சேர்ந்தவர் மணிமாறன் (44) விவசாயி. கடந்த சில மாதங்களாக உடல் நல பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். மருத்துவம் பார்த்தும் நோய் குணமாகவில்லை.

இதனால் விரக்தியடைந்த அவர் வீட்டில் பூச்சி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார். உறவினர்கள் அவரை மீட்டு அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. இதுகுறித்து மணிமாறன் மனைவி ஜெயலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் எம்.ரெட்டியப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாத்தூர் அருகே உள்ள படந்தால் பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி (58). கூலித் தொழிலாளி. இவரது மனைவி பர்வதம். மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கருப்பசாமி தனியாக வசித்து வந்தார். ஆனால் தனது சம்பளத்தை மட்டும் மனைவியிடம் கொடுத்து விடுவாராம். வீடு கட்டுவதற்காக இடம் கொடுத்தது தொடர்பாக இவர்களுக்குள் பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் விறகு வெட்டுவதற்காக வாங்கிய அரிவாளுடன் வீட்டிற்கு வந்தார். அதை பார்த்து தங்களை தாக்குவதற்காக வருவதாக கருப்பசாமியின் மகன் தவறாக நினைத்து அவருடன் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டார். இதனால் மனமுடைந்த கருப்பசாமி பூச்சி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார். உறவினர்கள் அவரை மீட்டு சாத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் பரிசோதித்த போது அவர் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து பர்வதம் கொடுத்த புகாரின் பேரில் சாத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News