உள்ளூர் செய்திகள் (District)

அட்டை கம்பெனியில் தீ விபத்து

Published On 2023-07-04 07:32 GMT   |   Update On 2023-07-04 07:32 GMT
  • சாத்தூர் அருகே அட்டை கம்பெனியில் தீ விபத்து ஏற்பட்டது.
  • இந்த விபத்து குறித்து சாத்தூர் தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சாத்தூர்

சாத்தூர் பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவருக்கு சொந்தமான அட்டை கம்பெனி பெத்துரெட்டிப்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த கம்பெனியில் சுமார் 100க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகின்றனர்.

இந்தநிலையில் கழிவு பேப்பர்களை சேகரிக்கும் இடத்தில் திடீரென தீப்பிடித்தது. சிறிதுநேரத்தில் தீ வேகமாக பரவத்தொடங்கியது. அங்கிருந்த தீயணைப்பு கருவிகள் மூலம் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ பரவி கொழுந்துவிட்டு எரிந்ததால் தீயணைப்பு நிலையம் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சாத்தூர், சிவகாசி, வெம்பக்கோட்டைஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். இதனால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த விபத்து குறித்து சாத்தூர் தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News