உள்ளூர் செய்திகள் (District)
- சிவகாசி பி.எஸ்.ஆர். கல்லூரியில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது.
- சுகாதார ஆய்வாளர் ராகவன் பரிசோதனைகளை செய்தார்.
சிவகாசி
சிவகாசி பி.எஸ்.ஆர். கல்லூரியில் பயோமெடிக்கல் துறையின் சார்பில் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கான உடல் மற்றும் ரத்த பரிசோதனை முகாம் நடந்தது.
இந்த முகாமில் பி.எஸ்.ஆர். கல்வி குழுமங்களின் தாளாளர் ஆர்.சோலைசாமி தொடங்கி வைத்தார். இதில் டாக்டர் செந்தட்டிகாளை, சுகாதார ஆய்வாளர் ராகவன் மற்றும் மருத்துவ குழுவினர் 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு உடல், கண், ரத்த பரிசோத னைகளை இலவசமாக செய்தனர்.
இந்த முகாமிற்கான ஏற்பாடுகளை பயோமெடிக்கல் துறை தலைவர் மணிகண்டன், பேராசிரியர்கள் பபிதா தங்கமலர், கிருத்திகா ஆகியோர் செய்திருந்தனர்.