உள்ளூர் செய்திகள்

பழங்கள் தினவிழா

Published On 2023-08-07 08:45 GMT   |   Update On 2023-08-07 08:45 GMT
  • பழங்கள் தினவிழா நடந்தது.
  • பழக்கலவை செய்து விநியோகிக்கப்பட்டது.

ராஜபாளையம்

ராஜபாளையம் அருகே உள்ள முறம்பு மில்கேட் பகுதியில் உள்ள ஸ்ரீராம் மழலையர் மற்றும் துவக்கப்பள்ளியில் பழங்கள் தினவிழா பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் குழந்தைகளால் கொண்டாடப்பட்டது. ஆரோக்கியம் எங்கே? என்ற வினாவிற்கு விடையாக கொண்டாடப்பட்ட விழாவில் பல வகையான பழங்களின் நன்மையை வண்ண ஆடையுடன் எடுத்துரைத்தனர்.

சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? என கேள்வி கேட்டு அவ்வை பாட்டி மூலம் செயல் வழி கல்வியை தொடங்கி வைத்தது தமிழ்கடவுள் முருகபெருமான் என எடுத்துரைக்கப்பட்டது. விழா முடிவில் மழலை மொழி பாடிய குழந்தை களுக்கு பழக்கலவை செய்து விநியோகிக்கப்பட்டது.  

Tags:    

Similar News