உள்ளூர் செய்திகள் (District)
- எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழாவில் 10 குழந்தைகளுக்கு தங்கம் வழங்கப்பட்டது
- காரியாபட்டி ஒன்றிய அவைத்தலைவர் இந்திரா கிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
காரியாபட்டி ,
விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு பேரூராட்சி முடியனூர் கிராமத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்தநாள் விழா அ.தி.மு.க. சார்பில் நடந்தது.
காரியாபட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் ராமமூர்த்தி ராஜ் தலைமை தாங்கினார். கிழக்கு ஒன்றிய செயலாளர் தோப்பூர் முருகன் முன்னிலை வகித்தார். விழாவில் 2022 -ஆம் ஆண்டு பிறந்த 10 பெண் குழந்தைகளுக்கு முடியனூர் வார்டு செயலாளர் பிரகலாதன் சார்பில் அவரது மனைவி உஷாராணி 10 பெண் குழந்தைகளுக்கு 2 கிராம் வீதம் 20 கிராம் தங்கம் வழங்கினார். மேலும் குழந்தைகளுக்கு ரூ.5ஆயிரம் வைப்பு நிதி வழங்கப்பட்டது.
விழாவில் மல்லாந்து நகர் நகரச் செயலாளர் அழகர்சாமி, நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் மணிராஜ், காரியாபட்டி ஒன்றிய அவைத்தலைவர் இந்திரா கிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.