உள்ளூர் செய்திகள் (District)

மாநில அளவிலான ரோடு சைக்கிளிங் போட்டியில் சாதனை படைத்த மாணவிகள் சி.சுவாதிகா, மஞ்சரி ஆகியோரை பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டிய காட்சி.

மாநில அளவிலான சைக்கிளிங் போட்டியில் அபார சாதனை

Published On 2023-07-20 09:30 GMT   |   Update On 2023-07-20 09:30 GMT
  • ஸ்ரீவில்லிபுத்தூர் பள்ளி மாணவிகள் மாநில அளவிலான சைக்கிளிங் போட்டியில் அபார சாதனை படைத்தனர்.
  • மாணவ, மாணவிகள் கலந்து ெகாண்டனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் 49-வது தமிழ்நாடு மாநில அளவி–லா ன ரோடு சைக்கிளிங் போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்க–ளில் இருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து ெகாண்டனர்.

மாணவிகள் சாதனை

இதில் 18 வயதுக்கு உட்பட்டோருக்கான பெண்கள் பிரிவில் ஸ்ரீவில்லிபுத்தூர் லயன்ஸ் மெட்ரிக்குலேசன் பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவி சி.சுவா–திகா முதலிடத்தை பிடித்து ரூ.9 ஆயிரம் ரொக்கப்பரி–சையும் வென்றார்.

அதே பள்ளியில் படிக் கும் மாணவி மஞ்சரி இரண்டாமிடம் பிடித்து ரூ.7 ஆயிரம் ரொக்க பரிசை பெற்றார். மாநில அளவில் சாதனை படைத்து பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவி–கள் சி.சுவாதிகா, மஞ்சரி ஆகியோரை பள்ளி தாளா–ளர் ஆர்.வெங்கடாஜலபதி, பள்ளி முதல்வர் எம்.சுந்தர–மகாலிங்கம் மற்றும் லயன்ஸ் சங்க உறுப்பினர்கள் ஆகி–யோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

பாராட்டு

அதேபோல் மாணவிக–ளுக்கு உரிய பயிற்சி அளித்து ஆக்கமும், ஊக்கமும் அளித்த உடற்கல்வி ஆசிரி–யர்கள் தர்மராஜ், சக்தி–வேல் ஆகியோரும் பாராட்டி கவுரவிக்கப்பட்ட–னர்.

Tags:    

Similar News