உள்ளூர் செய்திகள் (District)

விருதுநகர் கோர்ட்டு வளாகத்தில் மாவட்ட கூடுதல் நீதிபதி ஹேமந்த்குமார் தலைமையில் யோகா பயிற்சி நடந்தது.


யோகா பயிற்சியில் நீதிபதிகள் பங்கேற்பு

Published On 2022-06-21 08:46 GMT   |   Update On 2022-06-21 08:46 GMT
  • யோகா பயிற்சியில் நீதிபதிகள் பங்கேற்றனர்.
  • யோகா செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

பாலையம்பட்டி

ஆண்டுதோறும் ஜூன் 21-ந் தேதி சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்படுகிறது.

இதையொட்டி விருதுநகர் நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட கூடுதல் நீதிபதி ஹேமந்த்குமார் தலைமையி் யோகா பயிற்சி நடந்தது. இதில் நீதிபதிகள் ராஜ்குமார், சிந்துமதி, கவிதா மற்றும் நீதித்துறை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

அருப்புக்கோட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் யோகா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் யோகா பயிற்சி நடந்தது. இதில் அருப்புக்கோட்டை நீதிமன்ற சார்பு நீதிபதி ராமலிங்கம், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி பத்மநாபன், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி கலைநிலா, குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி முத்துஇசக்கி ஆகியோர் பங்கேற்றனர்.

யோகா ஆசிரியர் சுந்தர்ராஜன் பயிற்சி அளித்தார். இந்த நிகழ்ச்சியில் யோகா செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இதில் அருப்புக்கோட்டை வழக்கறிஞர் சங்கத் தலைவர் குருசாமி, செயலாளர் பாலச்சந்திரன் மற்றும் வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்களும் கலந்து கொண்டனர். சாத்தூரில் உலக யோகா தினத்தை முன்னிட்டு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் யோகா நிகழ்ச்சி நடந்தது.

சாத்தூர் நீதித்துறை நடுவர்கள் இதில் பங்கேற்று ஆசனங்கள் செய்தனர். சார்பு நீதிமன்ற நீதிபதி சங்கர், மாவட்ட உரிமையியல் நீதித்துறை நடுவர் அனுராதா, நீதித்துறை குற்றவியல் நடுவர் ராஜபிரபு ஆகியோர் பலவிதமான யோகா ஆசனங்களை செய்தனர்.

யோகா ஆசிரியர் ஆசனங்களை செய்து காண்பித்து அதற்கான பலன்களை விளக்கிக் கூறினார்.

Tags:    

Similar News