உள்ளூர் செய்திகள்

காளீஸ்வரி கல்லூரியில் தபால் தலை கண்காட்சி

Published On 2022-12-25 08:53 GMT   |   Update On 2022-12-25 08:53 GMT
  • காளீஸ்வரி கல்லூரியில் தபால் தலை கண்காட்சி நடந்தது.
  • கல்லூரி முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார்.

சிவகாசி

சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் தபால் துறை விருதுநகர் பிரிவு சார்பில் ''தபால் தலை சிறப்புக் கண்காட்சி'' தொழில்நுட்ப நூலகத்தில் நடந்தது.

இந்த கண்காட்சியின் முதன்மை நோக்கமாக தபால் தலை விழிப்புணர்வு மற்றும் தபால் துறையின் முக்கியத்துவமும் காட்சி படுத்தப்பட்டு இருந்தது. கல்லூரி முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கி மாணவர்களிடமும், நாட்டு நலப்பணித்திட்ட தன்னார்வலர்களிடமும் பேசினார்.

கண்காட்சியில் தபால் துறை அலுவ லர்களும் கலந்து கொண்டு விளக்கம் அளித்தனர். இதில் சுமார் 1,500 மாணவர்கள் கலந்து கொண்டு தபால் தலைகளை பார்வை யிட்டனர். இதற்கான ஏற்பாடுகளை நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர் ராஜீவ்காந்தி செய்திருந்தார்.

Tags:    

Similar News