உள்ளூர் செய்திகள்

நடந்தை ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் தீர்மான நோட்டை கிழித்த கவுன்சிலர் கணவர் சிறையில் அடைப்பு

Published On 2022-11-07 09:32 GMT   |   Update On 2022-11-07 09:32 GMT
  • கடந்த 1-ம் தேதி உள்ளாட்சி தின சிறப்பு கிராம கூட்டம் நடந்தை அருகே புளியம்பட்டி அருந்ததியர் தெருவில் நடைபெற்றது.
  • அந்த கிராம சபை கூட்டத்திற்கு வந்த 3-வது வார்டு கவுன்சிலர் வேணியின் கணவர் ரமேஷ் என்பவர் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

பரமத்தி வேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா நடந்தை அருகே புளியம்பட்டி அருந்ததியர் தெருவைச்சேர்ந்தவர் முருகேசன்( 50 ).இவரது மனைவி வசந்தா (46) .இவர் நடந்தை ஊராட்சி மன்ற தலைவராக கடந்த 3 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த 1-ம் தேதி உள்ளாட்சி தின சிறப்பு கிராம கூட்டம் நடந்தை அருகே புளியம்பட்டி அருந்ததியர் தெருவில் நடைபெற்றது . அப்போது அந்த கிராம சபை கூட்டத்திற்கு வந்த 3-வது வார்டு கவுன்சிலர் வேணியின் கணவர் ரமேஷ் என்பவர் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதில் ஆத்திரம் அவர் கிராமசபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான நோட்டை பிடுங்கி கிழித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து நடந்தை ஊராட்சி தலைவர் வசந்தா நல்லூர் போலீசில் புகார் செய்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ரமேசை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில் ரமேஷ் பதுங்கி இருந்த இடத்தை பற்றி தகவல் அறிந்த போலீசார், அங்கு விரைந்து சென்று சுற்றி வளைத்து அவரை கைது செய்தனர். பின்னர் அவர் நாமக்கல் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிபதியின் உத்தரவின் பேரில் நாமக்கல் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார். 

Tags:    

Similar News