உள்ளூர் செய்திகள் (District)

கோவையில் காப்பகத்தில் தம்பதியை தாக்கிய வார்டன் கைது

Published On 2022-11-13 09:01 GMT   |   Update On 2022-11-13 09:01 GMT
  • கீரணத்தம் ரோட்டில் முதியோர் காப்பகம் உள்ளது.
  • புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காப்பக வார்டன் பிரான்சனை கைது செய்தனர்.

கோவை,

கோவை சரவணம்பட்டி அடுத்த கீரணத்தம் ரோட்டில் முதியோர் காப்பகம் உள்ளது. இங்கு கோவையை சேர்ந்த ஜெபஸ்டின் (வயது 65) மற்றும் அவரது மனைவி ஜெயமணி(60) தங்கி உள்ளனர்.

காப்பகத்திலேயே ஜெயமணி சமையல் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு ஜெயமணி காப்பகத்தில் இருந்தார். அப்போது வெளியே அவரது கணவர் ஜெபஸ்டினின் அலறல் சத்தம் கேட்டது.

அவர் வெளியே சென்று பார்த்த போது காப்பக வார்டன் பிரஸ் காலனியை சேர்ந்த பிரான்சன்(44) என்பவர் குச்சியால் ஜெபஸ்டினை தாக்கி கொண்டிருந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ஜெயமணி, வார்டனை கண்டித்தார்.

அப்போது வார்டன் பிரான்சன் அவரையும் தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கி கீழே தள்ளி விட்டார். வார்டன் தாக்கியதில் ஜெபஸ்டினு க்கு மூக்கு, காதில் ரத்தம் கொட்டியது.

இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்ப ட்டார். பின்னர் இது குறித்து ஜெயமணி சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காப்பக வார்டன் பிரான்சனை கைது செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

காப்பகத்தில் முதியவரை வார்டன் தாக்கிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News