உள்ளூர் செய்திகள் (District)
நாகையில் நடந்த அறிவியல் கண்காட்சியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு- கலெக்டர் வழங்கினார்
- அறிவியல் கண்காட்சியில் மாணவர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
- நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் பலர் கலந்துகொண்டனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் நீலா வடக்கு வீதியில் இயங்கி வரும் ஸ்ரீ லலிதாம்பிகா வித்யா மந்திர் பள்ளியில் கடந்த பிப்ரவரி 25 ம் தேதி அறிவியல் கண்காட்சி மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் முன்னிலையில் நடைபெற்றது.
இந்நிலையில் அறிவியல் கண்காட்சியில் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிகாட்டிய மாணவர்கள் அனைவருக்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சான்றிதழ்களையும், கேடயங்களையும், நாகை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் முதல்வர் ஆர்த்தி சந்தோஷ், பள்ளியின் ஆசிரியர்களும் கலந்துகொண்டனர்.