உள்ளூர் செய்திகள் (District)
பெரியகுளம் அருகே அரசு மோட்டார் ரூமில் வயர்கள் திருட்டு
- சம்பவத்தன்று 2 வாலிபர்கள் மோட்டார் ரூமில் இருந்து ரூ.10200 மதிப்புள்ள வயர்களை திருடி சென்றனர்.
- இது குறித்து தென்கரை போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
பெரியகுளம்:
பெரியகுளம் தென்கரையைச் சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன். இவர் சோத்துப்பாறை சாலை, மஞ்சோடை வராக நதி கரையோரம் அமைந்துள்ள லட்சுமிபுரம் கூட்டுக்குடிநீர் திட்ட அரசு மோட்டார் ரூமில் பராமரிப்பு உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று 2 வாலிபர்கள் மோட்டார் ரூமில் இருந்து ரூ.10200 மதிப்புள்ள வயர்களை திருடி சென்றனர்.
இது குறித்து தென்கரை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போது கெங்குவார்பட்டியைச் சேர்ந்த பால்பாண்டி, ஜெேகந்திரன் ஆகியோர் மோட்டார் ரூமில் மின் வயர் திருடியது தெரிய வந்தது. ஜெகேந்திரனை கைது செய்த நிலையில் தப்பி ஓடிய பால்பாண்டியைத் தேடி வருகின்றனர்.