மனைவியுடன் விஷம் குடித்து தொழிலாளி சாவு
- குமாரபாளையம் நாராயண நகர் பகுதியில் வசிப்பவர் கணேசன் (வயது 70). இவரது மனைவி தங்கம்மாள் (65). இருவரும் கூலி வேலை செய்பவர்கள். வயது முதிர்வின் காரணமாக இருவருக்கும் உடல்நிலை பாதிக்கப்பட்டது. ஒரு கட்டத்தில் முடியாமல் போகவே தற்கொலை செய்து கொள்ள இருவரும் முடிவு செய்துள்ளனர்.
- கடந்த 13-ந் தேதி மாலை இருவரும் ஒன்றாக விஷம் குடித்து உள்ளனர். இதனால் வீட்டில் மயங்கி கிடந்தனர்.
குமாரபாளையம்:
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நாராயண நகர் பகுதியில் வசிப்பவர் கணேசன் (வயது 70). இவரது மனைவி தங்கம்மாள் (65). இருவரும் கூலி வேலை செய்பவர்கள். வயது முதிர்வின் காரணமாக இருவருக்கும் உடல்நிலை பாதிக்கப்பட்டது. ஒரு கட்டத்தில் முடியாமல் போகவே தற்கொலை செய்து கொள்ள இருவரும் முடிவு செய்துள்ளனர்.
கடந்த 13-ந் தேதி மாலை இருவரும் ஒன்றாக விஷம் குடித்து உள்ளனர். இதனால் வீட்டில் மயங்கி கிடந்தனர். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர், கணேசன்-தங்கம்மாள் தம்பதியின் மகன் சரவணனுக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த சரவணன், பெற்றோரை மீட்டு, பெருந்துறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு, சிகிச்சை பலனின்றி கணேசன் பரிதாபமாக உயிரிழந்தார்.
தங்கம்மாள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவ குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.