உள்ளூர் செய்திகள்

காரமடையில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

Published On 2023-05-21 09:36 GMT   |   Update On 2023-05-21 09:36 GMT
  • ஈரம் படிந்த கை உடன், டி.வி செட்டாப் பாக்ஸை துடைக்க முயன்றார்.
  • படுகாயம் அடைந்தவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.

மேட்டுப்பாளையம்,

காரமடை சாஸ்திரி நகரைச்சேர்ந்தவர் முனியப்பன்(வயது 39).

இவர் காரமடை காய்கறி மார்க்கெட்டில் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் அவர் நேற்று வீட்டை சுத்தம் செய்து கொண்டு இருந்தார்.

அப்போது ஈரம் படிந்த கை உடன், டி.வி செட்டாப் பாக்ஸை துடைக்க முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியது.

இதில் படுகாயம் அடைந்தவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் முனியப்பன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முனியப்பனுக்கு மகள் உள்பட 2 குழந்தைகள் உள்ளன.

இவரது மனைவி அமுதா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போனார். எனவே முனியப்பன் தனியாக பிள்ளைகளை வளர்த்து வந்தார். இந்த நிலையில் அவர் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம், காரமடையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News