உள்ளூர் செய்திகள் (District)

பள்ளி மாணவ, மாணவிகள் யோகா பயிற்சியில் ஈடுபட்ட போது எடுத்தபடம்.

பொத்தனூர் பிருந்தாவன் மெட்ரிக் பள்ளியில் உலக யோகா தின நிகழ்ச்சி

Published On 2022-06-23 08:46 GMT   |   Update On 2022-06-23 08:46 GMT
  • பொத்தனூர் மெயின் ரோட்டில் உள்ள பிருந்தாவன் மெட்ரிக் பள்ளியில் உலக யோகா தினத்தை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் யோகா பயிற்சி நடைபெற்றது.
  • இதில் 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி செய்தனர்.

 பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பொத்தனூர் மெயின் ரோட்டில் உள்ள பிருந்தாவன் மெட்ரிக் பள்ளியில் உலக யோகா தினத்தை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் யோகா பயிற்சி நடைபெற்றது.இதில் 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு யோகா பயிற்சி செய்தனர்.

நிகழ்ச்சியில் பள்ளியின் தலைவர் மணி, செயலாளர் மற்றும் பொருளாளர் தனசேகரன், தாளாளர் இளங்கோ, பள்ளியின் இயக்குனர்கள், முதல்வர் ரஜினி, ஆசிரிய ஆசிரியைகள், அலுவலகப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News